சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஆப்கன் சிறைக் கலவரத்தில் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

News image

8 killed in Afghan prison riot

Updated On :29 அக்டோபர் 2020, 9:49 am

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

ஹெராத் சிறைச்சாலையில் கைதிகள் உருவாக்கிய சில பகிர்வுகளை காவல்துறையினர் அகற்றத் தொடங்கினர். இதையடுத்து, சிறையின் 5-வது பிளாக்கில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெராத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

மேலும், கைதிகள் பிளாக் 5-ஐ எரித்ததாகவும், நள்ளிரவு வரை இந்த கலவரம் தொடர்ந்ததாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.