குஜராத் இடைத்தேர்தல்: 18% வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள்

குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் 18 சதவீத வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் 18 சதவீத வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

ஏடிஆர் அறிக்கையின்படி, 80 வேட்பாளர்களில் 14 பேரின் வாக்கெடுப்பு பிரமாணப் பத்திரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு குற்றவியல் வழக்குகளை அறிவித்துள்ளனர், அவர்களில் ஏழு பேர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

கட்சி வாரியாக, பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், பாஜகவின் 8 வேட்பாளர்களில் 3 பேர், காங்கிரசின் 8 வேட்பாளர்களில் 2 பேர், 53 சுயேச்சை வேட்பாளர்களில் 8 பேர் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிவித்துள்ளதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்பவர்களில் பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், பாஜகவைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களில் இருவர், 53 சுயேச்சை வேட்பாளர்களில் 4 பேர் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து அப்தாசா, லிம்ப்டி, மோர்பி, தாரி, கடதா, கர்ஜன், டாங் மற்றும் கப்ராடா ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com