
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் தளா்வுகள் செய்யப்பட்டு, ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்ட பின் கிடைத்த அதிக காணிக்கை இது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.