

உடல்நலக் குறைவால் சுவாமி அக்னிவேஷ் இன்று காலமானார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஆரிய சமாஜத்தில் இணைத்தார். பின்னர் 2004-2014 வரை ஆரிய சமாஜத்தின் உலகக் குழுவின் தலைவராக பதவி வகித்தார். மேலும் சமூக சேவையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக சுவாமி அக்னிவேஷ் கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 80. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சுவாமி அக்னிவேஷ்-க்கு மாலை 6 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து 6.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். "சுவாமி அக்னிவேஷின் மறைவு ஒரு பெரிய சோகம். மனிதநேயத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு உண்மையான போர்வீரன்" என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

