எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய வீரர் படுகாயம்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போர் நிறுத்த உத்தரவை மீறி பாகிஸ்தான் வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நயிக் அனீஷ் தாமஸ் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து ராணுவ வீரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினர் கண்காணித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...