ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கேரளத்தில் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக பாஜக பேரணி

தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக்கோரி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

News image
கேரளத்தில் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக பாஜக பேரணி
Updated On :16 செப்டம்பர் 2020, 10:49 am

DIN

தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக்கோரி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் தொடர்புடையதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதில் ஆஜராக மறுப்பு தெரிவித்து வந்த அமைச்சர் ஜலீலை கண்டித்து பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ்  கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் கலீலின் அறிக்கைகளை ஆராய்ந்து மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையெ அமைச்சர் கலீல் பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்துகொண்டு அமைச்சர் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.