பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கர்நாடக எம்.பி. அசோக் கஸ்டி கரோனாவால் பலி

கர்நாடக மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்டி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
கர்நாடக எம்.பி. அசோக் கஸ்டி கரோனாவால் பலி
Updated On :17 செப்டம்பர் 2020, 12:26 pm

DIN

கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்டி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடகத்தில் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அசோக் கஸ்டி கடந்த 2-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

55 வயதான அவர் கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில நாள்களாக மூச்சுப் பிரச்சினை காரணமாக அவதியடைந்து வந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் உறுப்புகள் செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.