தலிபான் தாக்குதலில் 9 ஆப்கன் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின், தக்கார் மாகாணத்தில் தலிபான் நடத்திய பயங்கர தாக்குதலில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 
9 Afghan security personnel dead in Taliban ambush
9 Afghan security personnel dead in Taliban ambush
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானின், தக்கார் மாகாணத்தில் தலிபான் நடத்திய பயங்கர தாக்குதலில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

நவாபாத் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆப்கானைச் சேர்ந்து 3 காவல் அதிகாரிகள் உள்பட 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். 

மேலும் இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கட்டாரின் தலைநகரான தோஹாவில் ஆப்கானிய அரசாங்கம் மற்றும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் இத்தகைய தாக்குதலை தலிபான்கள் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com