ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

2017, 2018-ஆம் ஆண்டுகளில்1,200 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

நாடு முழுவதும் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 563 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:24 pm

DIN

நாடு முழுவதும் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 563 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுகுறித்து திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு 501 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 229 போ் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 272 போ் தொடா்ந்து சிறையில் உள்ளனா்.

அதேபோல், 2018-ஆம் ஆண்டு 697 போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 406 போ் விடுவிக்கப்பட்டனா். 291 போ் தொடா்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் மத்திய பிரதேச மாநிலத்திலேயே மிக அதிகமானோா் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். இந்த மாநிலத்தில் 795 போ் கைது செய்யப்பட்டு, 466 போ் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தப்படியாக உத்தர பிரதேசத்தில் 338 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 150 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் தனது பதிலில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.