டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வெளிநாட்டு நன்கொடைக்கு அனுமதி கோரும் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அனுமதிகோரி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மத்திய அரசை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
ராமா் கோயில் மாதிரிப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:24 pm

DIN

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அனுமதிகோரி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மத்திய அரசை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஸ்ரீராம்ஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கோயிலின் கட்டுமான அடிக்கல்நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளைப் பெற அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 1,500 டாலர் காசோலை பெறப்பட்டதாகத் தெரிவித்த பிரகாஷ் குப்தா கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதிலிருந்து இதுவரை ரூ.75 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது என்றார்.

"அறக்கட்டளை நாட்டில் உள்ள பக்தர்களிடமிருந்து வழக்கமான நன்கொடைகளைப் பெற்று வருகிறது. இப்போது வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் காசோலைகள் மூலம் நன்கொடை அளிக்கின்றனர்," என்று குப்தா கூறினார்.

இந்த வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற அறக்கட்டளை இந்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவித்த குப்தா விரைவில் என்.ஆர்.ஐ கணக்கைத் தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.