வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

Updated On :23 செப்டம்பர் 2020, 12:52 pm

ANI


தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்று பாதித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மணீஷ் சிசோடியாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு செப்டம்பர் 14-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில் கூறியிருந்ததாவது, ‘லேசானா காய்ச்சலைத் தொடா்ந்து எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் நலமாக உள்ளேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் அனைவரின் ஆசிா்வாதத்தால் விரைவில் மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன்’ என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.