ராஜஸ்தான்: ஆசிரியர் நியமனம் தொடர்பாக துங்கர்பூரில் ஆர்ப்பாட்டம் 

ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 
ஆசிரியர் நியமனம் தொடர்பாக துங்கர்பூரில் ஆர்ப்பாட்டம் 
ஆசிரியர் நியமனம் தொடர்பாக துங்கர்பூரில் ஆர்ப்பாட்டம் 

ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பப் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 2018 ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1,167 பொதுப்பிரிவில்  காலியாக உள்ள பதவிகளை எஸ்.சி பிரிவு அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 8-இல் ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு, காலியிடங்களை நிரப்பக்கோரி காவல்துறையினர் மீது கற்களை வீசியும், வாகனங்களை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com