தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சத்தீஸ்கர்: பத்திரிகையாளர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மணல் கொள்ளையை எதிர்த்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 செப்டம்பர் 2020, 11:46 am

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் மணல் கொள்ளையை எதிர்த்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் பகுதியில் மணல்கொள்ளை நடைபெறுவதை கண்டித்து குழுவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கமல் சுக்லா என்பவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று காங்கிரஸ் பிரமுகர்கள் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த இந்த செயலை காவல்துறையினரும் தடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் காவல்நிலையத்தின் வெளியே வந்தபோது காங்கிரஸ் பிரமுகரான கஃபார் மேனன், கணேஷ் திவேரி, சதாப் கான் ஆகியோர் பத்திரிகையாளரை கடுமையாக தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

இதனைத் தடுக்க வந்த சக பத்திரிகையாளர் இருவரையும் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர். இது குறித்து ஆளுநர் அனுசுயா யுகேவிற்கு கடிதம் மூலம் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளார்.

காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகரகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.