ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குஜராத், ம.பி. உள்ளிட்ட 11 மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிப்பு

குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :29 செப்டம்பர் 2020, 9:16 am

DIN

குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 

மணிப்பூரில் காலியாக உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும். 

முன்னதாக, தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதாக மாநில தலைமைச் செயலர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதால், தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை என ஆணையம் அறிவித்துள்ளது. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.