தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும் : ராகுல் காந்தி ட்வீட்

உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 7:20 am

உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையை கருத்தில் கொண்டு மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அந்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, பாரசிட்டமால், ஹைட்ரோகுளோரோகுயின் ஆகிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையை விலக்கியுள்ளது. 

தொடர்ந்து இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நட்பு என்பது பழி வாங்குவது அல்ல. இக்கட்டான சூழ்நிலையில், தேவைப்படும்போது மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவுவது அவசியம். ஆனால், அதேநேரத்தில், கரோனா விஷயத்தில் தற்போது இந்தியாவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால், உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். நமக்கான தேவை போகத்தான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும். இந்த சமயத்தில் இந்தியர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.