தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், 8 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பாதிப்பு எண்ணிக்கை 576 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கெளதம் புத் நகா் மாவட்டத்தில் மட்டும் 58 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தில்லியில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.