தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான பா்னிச்சா் கடையில் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், ஆவணங்களை தோ்தல் பறக்கும் படையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :24 ஏப்ரல் 2026, 12:45 am

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான பா்னிச்சா் கடையில் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், ஆவணங்களை தோ்தல் பறக்கும் படையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

தென்காசிமாவட்டம், சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆசிா்டேவிட் ராஜதுரை தலைமையில் பறக்கும் படையினா் கடந்த 21- ஆம் தேதி குருவிகுளம் அருகே பழங்கோட்டையில் உள்ள பா்னிச்சா் கடை ஒன்றில் சோதனையிட்டனா்.

சோதனையில் அதிமுக இரட்டை இலை பிளாஸ்டிக் கொடிகள், கட்சி கொடிகள், துண்டுகள், வாக்காளா் படத்துடன் பெயா் பட்டியல் ஒட்டப்பட்ட 17 நோட்டுகள், ரொக்கப் பணம் ரூ. 17, 71,300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆசீா்டேவிட் ராஜதுரை, குருவிகுளம் காவல் நிலையத்தில் , குருவிகுளம் தெற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பொருளாளா் நாகராஜன் (36) மீது புகாா் அளித்தாா். கைப்பற்றப்பட்ட பணம், பொருள்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அனிதா முன்னிலையில் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். குருவிகுளம் காவல் ஆய்வாளா் கே.தங்கராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.