மகாராஷ்டிரத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி
Updated on
1 min read

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,297 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வெளியே வரும் போது முகக்கவசம் அணிந்து கொண்டு வரும்படி மகாராஷ்டிர அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. மும்பையில் கரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறிவருவதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ எட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com