கர்நாடகத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 30 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
கடந்த 19 மணி நேரத்தில் 10 புதிய கரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், 6412 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 199 பேர் உயிரிழந்துள்ளனர்.