குஜராத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா உறுதி; பாதிப்பு 493 ஆக உயர்வு!

குஜராத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா உறுதி; பாதிப்பு 493 ஆக உயர்வு!

குஜராத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை  8,356 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 25 பேரில் 23 பேர் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் ஆனந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதுவரை அங்கு 44 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com