வியத்நாமில் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங், வியத்நாமின் பேக் நின் நகரில் உள்ள மொபைல் டிஸ்பிளே தயாரிப்பு தொழிற்சாலையை மூடியதாக அறிவித்துள்ளது.
தொழிற்சாலையில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, அங்கு தயாரித்த மொபைல் டிஸ்பிளே பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.