ராஜஸ்தானில் மேலும் 80 பேருக்கு கரோனா உறுதி

ராஜஸ்தான் இன்று புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
ராஜஸ்தானில் மேலும் 80 பேருக்கு கரோனா உறுதி

ராஜஸ்தான் இன்று புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவானவைகளில் ஜோத்பூரில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரத்பூரில் 17, நாகூரில் 12, ஜெய்ப்பூரில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிகானேர், கோட்டா, ஜலவரில் தலா இருவர், பில்வாரா, ஜெய்சால்மர், ஜுன்ஜுனு, ஹனுமன்கர் மற்றும் சவாய் மாதோபூரில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக உள்ளது. உயிரிழப்பு 507 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,231 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com