பெங்களூரு: மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 14ம் தேதி காலையில் நடந்துள்ளது. இது தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல் மருத்துவர் ரம்யா ஹிமனீஷுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நிறைமாத கர்ப்பிணியான சாந்தி, பிரசவ வலியோடு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரம்யாவின் பல் மருத்துவமனைக்கு அருகே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாகக் கருதிய சாந்தியின் கணவர், அதை ஒரு பேப்பரில் சுற்றி வைத்துவிட்டார். இந்த நிலையில், சாந்திக்கு ரத்தப்போக்கும் நிற்கவில்லை. இந்த நிலையில் தான் ரம்யா அங்கு வந்தார். உடனடியாக குழந்தையையும், தாயையும் தனது கிளினிக்கைத் திறந்து அதற்குள் கொண்டு சென்று இருவருக்கும் தேவையான முதலுதவிகளை செய்தார். குழந்தைக்கு சில அடிப்படை முதலுதவி செய்ததும் அது உயிர்பிழைத்து விட்டது என்கிறார் ரம்யா.
பிறகு ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


