தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெங்களூருவில் சாலையோரம் பிரசவித்த தாய்க்கும் சேய்க்கும் வாழ்வளித்த பல் மருத்துவர்

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர்.

News image

Ramanathapuram shocking incident

Updated On :22 ஏப்ரல் 2020, 10:58 am

பெங்களூரு: மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 14ம் தேதி காலையில் நடந்துள்ளது. இது தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல் மருத்துவர் ரம்யா ஹிமனீஷுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நிறைமாத கர்ப்பிணியான சாந்தி, பிரசவ வலியோடு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரம்யாவின் பல் மருத்துவமனைக்கு அருகே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாகக் கருதிய சாந்தியின் கணவர், அதை ஒரு பேப்பரில் சுற்றி வைத்துவிட்டார். இந்த நிலையில், சாந்திக்கு ரத்தப்போக்கும் நிற்கவில்லை. இந்த நிலையில் தான் ரம்யா அங்கு வந்தார். உடனடியாக குழந்தையையும், தாயையும் தனது கிளினிக்கைத் திறந்து அதற்குள் கொண்டு சென்று இருவருக்கும் தேவையான முதலுதவிகளை செய்தார். குழந்தைக்கு சில அடிப்படை முதலுதவி செய்ததும் அது உயிர்பிழைத்து விட்டது என்கிறார் ரம்யா.

பிறகு ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.