மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று ரஷியா புறப்பட்டுச் சென்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனிக்கு எதிராக சோவியத் ரஷியா வெற்றி பெற்ற 75-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மாஸ்கோவில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று முதல் 3 நாள்களுக்கு ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
‘இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஜூன் 24 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
அமைச்சரின் இந்த ரஷிய பயணம் இந்தியாவுக்கும் -ரஷியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை பலப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைகளைச் சோ்ந்த 75 வீரா்கள் ஏற்கெனவே மாஸ்கோவை சென்றடைந்துள்ளனா்.