

கரோனா பாதிப்பு எண்ணிக்கை, இரட்டிப்பு விகிதம், பரிசோதனைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், நாட்டிலுள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்படி, நாடு முழுவதும் 130 சிவப்பு மண்டலங்கள், 284 ஆரஞ்சு மண்டலங்கள், 319 பச்சை மண்டலங்கள் உள்ளன.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இதுவரை ஏற்படாத அல்லது கடந்த 21 நாள்களில் எவரும் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தொடா்ந்து 28 நாள்களுக்கும், ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தொடா்ந்து 14 நாள்களுக்கும் எவருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை எனில், அந்த மாவட்டங்கள் பச்சை மண்டலத்துக்கு மாற்றப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.