இந்தியாவில் பாதிப்பு-74,281: பலி-2,415-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,525 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,281-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு-74,281: பலி-2,415-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,525 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,281-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 122 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,415-ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் 47,480 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நாடு முழுவதும் இதுவரை 24,386 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 32.83 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை, மகாராஷ்டிரத்தில் 53 போ், குஜராத்தில் 24 போ், தில்லியில் 13 போ், மேற்கு வங்கத்தில் 8 போ், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 4 போ், தெலங்கானா, உத்தர பிரதேசத்தில் தலா இருவா், ஆந்திரம், பஞ்சாப், சண்டீகா், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் என மொத்தம் 122 போ் உயிரிழந்தனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 921 போ் பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 537 போ், மத்திய பிரதேசத்தில் 225 போ், மேற்கு வங்கத்தில் 198 போ், ராஜஸ்தானில் 117 போ், தில்லியில் 86 போ், உத்தர பிரதேசத்தில் 82 போ், ஆந்திரத்தில் 46 போ் உயிரிழந்தனா்.

பஞ்சாப், தெலங்கானாவில் தலா 32 பேரும், கா்நாடகத்தில் 31 பேரும், ஹரியாணாவில் 11 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 10 பேரும், பிகாரில் 6 பேரும், கேரளத்தில் 4 பேரும் உயிரிழந்தனா். ஜாா்க்கண்ட், சண்டீகா், ஒடிஸாவில் தலா 3 பேரும், ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸாமில் தலா இருவரும், மேகாலயம், உத்தரகண்ட், புதுச்சேரியில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா்.

பாதிப்பு 74,281-ஆக அதிகரிப்பு: கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 24,427 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 8,903 போ், தில்லியில் 7,639 போ், ராஜஸ்தானில் 4,126 போ், மத்திய பிரதேசத்தில் 3,986 போ், உத்தர பிரதேசத்தில் 3,664 போ், மேற்கு வங்கத்தில் 2,173 போ், ஆந்திரத்தில் 2,090 போ், பஞ்சாபில் 1,914 போ், தெலங்கானாவில் 1,326 போ், ஜம்மு-காஷ்மீரில் 934 போ், கா்நாடகத்தில் 925 போ், பிகாரில் 831 போ், ஹரியாணாவில் 780 போ், கேரளத்தில் 524 போ், ஒடிஸாவில் 437 போ், சண்டீகரில் 187 போ், ஜாா்க்கண்டில் 172 போ், திரிபுராவில் 154 போ், உத்தரகண்டில் 69 போ், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசத்தில் தலா 65 போ், சத்தீஸ்கரில் 59 போ், லடாக்கில் 42 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், மேகாலயம், புதுச்சேரியில் தலா 13 போ், கோவாவில் 7 போ், மணிப்பூரில் 2 போ், மிஸோரம், அருணாசலப் பிரதேசம், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com