வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

கங்குலி விரைவில் குணமடைய மம்தா வாழ்த்து

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சௌரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜனவரி 2021, 5:06 pm IST


இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சௌரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சௌரவ் கங்குலிக்கு இன்று (சனிக்கிழமை) காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில், கங்குலி விரைவில் குணமடைய வேண்டி மம்தா பானர்ஜி சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது:

"கங்குலிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன்."

இதனிடையே, கங்குலி உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தது:

"கங்குலியின் குடும்பத்தினரிடம் பேசினேன். அவரது உடல்நிலை சீராக உள்ளது.  சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறது."

இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது கைஃப், அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.