நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தில்லி மழையால் அவதி: 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

தில்லியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கடும் குளிருக்கு மத்தியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

News image

42-வது நாளாக போராட்டம்: மழைக்கு மத்தியில் போராடி வரும் விவசாயிகள்

Updated On :6 ஜனவரி 2021, 12:49 pm IST


தில்லியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கடும் குளிருக்கு மத்தியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தொடர் மழையால் இன்று நடைபெறவிருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அதற்கு தயாராகி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியின் பல்வேறு எல்லைகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

நேற்று முன் தினம் (ஜன.4) நடைபெற்ற 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து வரும் 8-ஆம் தேதி மீண்டும் இரு தரப்பில் பேச்சு நடைபெறவுள்ளது.

 இதனிடையே தில்லியில் நான்காவது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடும் குளிர் நிலவி வரும் நிலையில், மழையும் பெய்வதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சாலைகளில் அமைத்துள்ள கூடாரங்கள் மழையிலிருந்து காத்தாலும், தரையில் தண்ணீர் தேங்குவதால், பெரும்பாலான கூடாரங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழையில் விறகுகள் நனைந்ததாலும், மாற்று உடைகள் நனைந்ததாலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

போராட்டத்தின்போது ஏற்கனவே 40-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை மற்றும் கடும் குளிர் விவசாயிகளை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நாளை நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு தயாராகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குடும்பங்களை விட்டு சாலைகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் போராடி வரும் எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.