/

கரோனாவில் இருந்து ஒரு கோடி போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 1:35 am IST


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,587 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,16,859-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.36 சதவீதமாகும்.

புதிதாக 20,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,03,95,278-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 222 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,336-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. தொடா்ந்து 17-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,28,083 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.19 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 222 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 66 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 25 பேரும், மேற்கு வங்கத்தில் 22 பேரும், தில்லியில் 16 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 6-ஆம் தேதி வரை 17.84 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 9,37,590 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.