கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைது

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைது

Updated On :9 ஜனவரி 2021, 6:17 pm IST


புது தில்லி: இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 8-ம் தேதி அதிகாலை, இந்திய - சீன எல்லையான லடாக் பகுதிக்கு அருகே தெற்கு பாங்காங் ஏரி பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால், சீன ராணுவ வீரர், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த இந்திய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவான பிறகு, இருநாட்டு எல்லைப் பகுதியிலும் அந்தந்த ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும் சீன வீரர், உரிய விதிமுறைகளின்படி நடத்தப்படுவார் என்றும், அவர் எல்லைத்தாண்டி வந்தது குறித்து விசாரணைக்கு உள்படுத்தப்படுவார் என்றும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.