தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வாட்ஸ்ஆப் கெடுபிடி: டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறும் பயனாளர்கள்

வாட்ஸ்ஆப் கெடுபிடி காட்டுவதால், ஏராளமான பயனாளர்கள் அதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறுவது அதிகரித்துள்ளது.

News image

வாட்ஸ்ஆப் கெடுபிடி: டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறும் பயனாளர்கள்

Updated On :9 ஜனவரி 2021, 6:16 pm IST

உங்களது தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது செயலியை அழித்துவிடுங்கள் என்று வாட்ஸ்ஆப் கெடுபிடி காட்டுவதால், ஏராளமான பயனாளர்கள் அதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறுவது அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்ஆப் பயனாளிகள் பலரும் டெலிகிராம் உள்ளிட்ட ஆப்களுக்கு மாறி வருவதாகவும், தற்போது அது அதிகரித்திருப்பதாகவும் டெலிகிராமின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

சுமார் 50 கோடி பயனாளர்களைக் கொண்டிருப்பதோடு, தொடர்ந்து இது அதிகரித்து வருவதாகவும், பேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய சவாலாக டெலிகிராம் உருவாகியுள்ளது என்றும் துரோவ் கூறியுள்ளார்.

தரம் மற்றும் தனிநபர் உரிமையில் டெலிகிராமுடன் போட்டியிட முடியாத பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப், இணையதளம்வாயிலாக தவறான தகவல்களை பரப்பி வருகிறது. டெலிகிராம் பற்றி தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருப்பதை கண்டறிந்துள்ளோம்.

அனைத்து பயனாளர்களும் தங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதை பெரும்பாலான பயனாளர்கள் ஏற்காமல், அதிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

பேஸ்புக் நிறுவனம் பல லட்சங்களை சந்தைப்படுத்துதலுக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் டெலிகிராம் சந்தைப்படுத்துதலுக்காக எந்தத் தொகையையும் செலவிடுவதில்லை. மக்கள் தற்போது புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்தது எது என்று தெரிந்து அதனை தேரிவு செய்கிறார்கள். அதனால்தான் 50 கோடி மக்கள் டெலிகிராமை பயன்படுத்துகிறார்கள் என்றும் துரோவ் கூறியுள்ளார். 

சிக்னல் செயலிக்கும் மவுசு

தற்போது செல்லிடப்பேசி எண்ணை சரிபார்க்கும் முறையானது சிக்னல் ஆப்பில் தாமதமாவதாகவும், ஒரே நேரத்தில் அதிகமானோர் வெரிஃபிகேஷன் செய்வதால்தான் அவ்வாறு நடப்பதாகவும், அதிகமானோர் சிக்னல் செயலியை நாடுவதால், உடனடியாக அதிலிருக்கும் குறைகள் சரி செய்யப்படும் என்றும் சிக்னல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முயற்சித்து முடியாமல் போனவர்கள் மீண்டும் முயற்சித்தால் செயலியை பயன்படுத்த இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.