தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆர் சம்மன் 

மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்க

Updated On :14 ஜனவரி 2021, 4:33 am IST

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்காத மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சம்மன் அனுப்பியுள்ளது.   

பாந்த்ரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமை பச்சிளங்குழந்கைகள் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 1 முதல் 3 மாதங்களே ஆன 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. இந்த தீ விபத்து குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த மாவட்ட ஆட்சியருக்கு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பான என்சிபிசிஆர் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை என்சிபிசிஆர் ஆணையத்துக்கு எந்த அறிக்கையையும் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை.  

இதையடுத்து பாந்த்ரா மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆர் புதன்கிழமை அனுப்பியுள்ள சம்மனில், தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக என்சிபிசிஆர் ஆணையத்தின் முன்பு வரும் ஜன. 18-ஆம் தேதி திங்கள்கிழமை விடியோ காணொலி மூலம் தீ விபத்து தொடர்பான பதிவுகள், ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.