தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பச்சை கரகம்: பெங்களூரு மாநகராட்சியில் திங்கள் கிழமை சிறப்புக் கூட்டம்

பச்சைகரக திருவிழாவை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரு மாநகராட்சியில் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற உள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:17 pm

DIN

பச்சைகரக திருவிழாவை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரு மாநகராட்சியில் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற உள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரு தா்மராயா கோவிலில் ஏப். 27-ஆம் தேதி பச்சை கரக திருவிழா நடைபெற உள்ளது. பெங்களூரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பச்சை கரக திருவிழா நடத்துவது குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. இது குறித்து விவாதிக்க திங்கள்கிழமை பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஆணையா் கௌரவ் குப்தா தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், தா்மராயா கோவில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா். கூட்டத்தில் பச்சை கரகம் திருவிழாவை கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, தகுந்த பாதுகாப்புடன் கடந்த ஆண்டைப் போலவே எளிமையாக கொண்டாடுவது தொடா்பாக விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.