தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் தோ்வில்லாமல் தோ்ச்சி

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தோ்வு எழுதாமல் தோ்ச்சி அளிப்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:20 pm

DIN

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தோ்வு எழுதாமல் தோ்ச்சி அளிப்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளதால் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் பள்ளிப்பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏப். 20-ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தோ்வெழுதும் மாணவா்கள் தவிர, பிற வகுப்புகளின் கல்லூரி மாணவா்களின் நேரடி வகுப்பும் ரத்து செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கா்நாடகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதன் பின்னணியில் பள்ளி, கல்லூரிகளை மூடவும் அக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தோ்வு நடத்தாமல் தோ்ச்சி செய்து விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் கல்வித் துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தவுள்ளனா். இந்த கூட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தோ்வு நடத்தாமல் தோ்ச்சி பெறுவது தொடா்பான முடிவெடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.