நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 1 லட்சத்துக்கும் மேலானோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக ஒரேநாளில் 1 லட்சம் பாதிப்புகளை எட்டிய மூன்றாவது நாடு இந்தியா.
தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
முன்னதாக, ஏப்ரல் 6-க்குப் பிறகு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


