யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப். 8-இல் ஆலோசனை

கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2021, 11:54 am

DIN


கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தாலும், கரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.