குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது: ஒடிசா அமைச்சர்

ஒடிசாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஏப்ரல் 2021, 10:54 am

DIN

ஒடிசாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: 

தற்போது எங்களிடம் 5.34 லட்சம் டோஸ் உள்ளது. தினமும் 2.5 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதன்படி இன்னும் இரு நாள்களுக்கு மட்டுமே எங்களிடம் தடுப்பூசி இருக்கும். 

குறைந்தபட்சம் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான 10 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து அனுப்ப வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிற்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இரு தினங்களுக்குள் மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

தற்போது தடுப்பூசி குறைவாக இருப்பதால் ஏற்கெனவே உள்ள 1,400 தடுப்பூசி மையங்களில் 700 மூடப்பட்டுவிட்டதாகவும் என்று கூறிய அவர் இரு தினங்களுக்குள் தடுப்பூசி கிடைக்காவிட்டால் எஞ்சிய 700 மையங்களின் செயல்பாட்டையும் நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.