யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அனைவருக்கும் தடுப்பூசி தேவை: பிரதமருக்கு கேஜரிவால் கடிதம்

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :8 ஏப்ரல் 2021, 5:58 am

DIN

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக தில்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தில்லியில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வழிவகை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் மேலும் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த  வேண்டும் என்றும்,

மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், முகாம்கள் அமைத்தும் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சில கரோனா தடுப்பூசிகளைப் பெற்றோம். அதிக அளவிலான கரோனா தடுப்பூசிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.