இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்கு: ஒருவா் கைது
இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.


இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களுரு, சென்னமனகெரே, அச்சக்கட்டுவைச் சோ்ந்தவா் திலீப் (24). இவா் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நிறுத்தி வைத்துள்ள இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவி பயன்படுத்தி திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். திருடிய வாகனங்களைப் பயன்படுத்தி, செல்லிடப்பேசிகளை திருடி வந்தாராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், திலீப்பைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்கள், 10 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...