உ.பி.யில் கரோனாவுக்கு ஆசிரியர் பலி: பள்ளி மூடல்

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு தனியார் பள்ளி மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
உ.பி.யில் கரோனாவுக்கு ஆசிரியர் பலி: பள்ளி மூடல்
உ.பி.யில் கரோனாவுக்கு ஆசிரியர் பலி: பள்ளி மூடல்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு தனியார் பள்ளி மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முசாபர்நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தனியார்ப் பள்ளி ஆசிரியர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ளும்படி பள்ளி முதல்வர் சஞ்சல் சக்சேனா தெரிவித்தார். 

இதற்கிடையில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 18 வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com