பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாதப் பிறப்பான சித்திரை 1 ஆம் தேதி இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்.
புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இன்று புத்தாண்டு கொண்டாடும் மற்ற மாநில மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.