சத்தீஸ்கரில் குப்பை கொண்டு செல்லும் வேனில் இறந்த கரோனா நோயாளிகளின் உடல் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் டோங்கர்கான் பகுதியில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த நான்கு கரோனா நோயாளிகளின் உடலை தகனம் செய்வதற்கு உடல்களை எடுத்துச்செல்ல குப்பை வேன் பயன்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'மாவட்டத்தில் ஒரு கரோனா மையத்தில் மூன்று பேர், மற்றொரு கரோனா மையத்தில் ஒருவர் என நேற்று நான்கு பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மூவருக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. நான்காமவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் உடல்கள் வேனில் எடுத்துச் செல்லப்பட்டதற்கு நகரப் பஞ்சாயத்துதான் காரணம். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் மிதிலேஷ் சௌவுத்ரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

