கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் உ.பி.யில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அறிவித்து அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை வாரந்தோறும் முழுவதுமாக மூடப்படும். ஆனால், துப்பரவு, சுத்திகரிப்பு மற்றும் அவசர சேவைகள் மட்டுமே வழக்கம்போல் செயல்படும்.
மேலும், முதல்முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதமும், மீண்டும் மீண்டும் முகக்கவசம் இன்றி பிடிபடுபவர்களுக்கு 10 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேவையான விழிப்புணர்வு பணிகளும் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 104 இறப்புகளும், 22,439 பேருக்கு புதிதாகத் தொற்றும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


