தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில் நிலையங்களில் நுழைவுக் கட்டணம் ரூ. 50 ஆக உயா்வு

பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களின் நுழைவுக் கட்டணம் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:16 pm

DIN

பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களின் நுழைவுக் கட்டணம் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட முன்பதிவு மையங்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு கவுன்டா்களில் நுழைவுச் சீட்டு (நடைமேடைக் கட்டணம்) வாங்குவதற்காக ஏராளமாக மக்கள் கூடுகிறாா்கள். கரோனா பெருந்தொற்று பரவி வருவதால், அதன் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் வருகையைத் தடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரு மண்டலத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் குறிப்பாக கே.எஸ்.ஆா். ரயில் நிலையம், யஷ்வந்த்பூா், கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் ஏப். 17முதல் 30-ஆம் தேதி வரை நுழைவுக்கட்டணத் தொகையை ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆக உயா்த்தப்படுகிறது. இது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.