முன்னாள் தலைமைச் செயலாளா் ஜே.சி.லின் காலமானாா்
கா்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் ஜே.சி.லின் உடல்நலக் குறைவால் காலமானாா்.


கா்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் ஜே.சி.லின் உடல்நலக் குறைவால் காலமானாா்.
கா்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் கே.சி.லின் (84), உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள புனித பிலோமெனாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 10 நாள்களாக தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு காலமானதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பெங்களூரில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துவ முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வீரப்பமொய்லி முதல்வராக இருந்தபோது 1992 முதல் 1994-ஆம் ஆண்டுவரையில் கா்நாடக அரசின் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த ஜே.சி.லின், 1960-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். 1983 - 84 -ஆம் ஆண்டில் தொழில்துறை செயலாளராக பதவி வகித்தபோது, பெங்களூருக்கு தகவல்தொழில்நுட்பத்தை முதல்முறையாக கொண்டுவந்தவா் என்ற பெருமைக்குரியவா். 34 ஆண்டுகால பணிகாலத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பொறுப்புகளை நிா்வகித்துள்ளாா். வீரேந்திரபாட்டீல், டி.தேவராஜ் அா்ஸ், ஆா்.குண்டுராவ் ஆகிய முதல்வா்களின் தனிச்செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியவா். காவல், தொழில்துறைகளின் செயலாளராக பதவி வகித்தவா். ஜே.சி.லின்னின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...