கரோனா எதிரொலி: லக்னௌவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தடை
உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், லக்னௌவில் ஷாஹி-இமாம்-இ-ஜும்மா மௌலானா கல்பே ஜவாத் நக்வி வெள்ளிக்கிழமை தொழுகையைத் தடை செய்ய உத்தரவிட்டார்.


உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், லக்னௌவில் ஷாஹி-இமாம்-இ-ஜும்மா மௌலானா கல்பே ஜவாத் நக்வி வெள்ளிக்கிழமை தொழுகையைத் தடை செய்ய உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியது,
ஆசிம் மசூதியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் தொழுகையை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தலைநகர் லக்னௌ உள்பட பல நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை உ.பி. அரசு வியாழக்கிழமை நீட்டித்துள்ளது.
இரண்டு மணி நேரம் நீட்டிப்புடன், ஊரடங்கு உத்தரவு தற்போது இரவு 8 மணி முதல் அடுத்தநாள் காலை 7 மணி வரை அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இரவு 10 முதல் அடுத்தாள் காலை 5 மணி வரை இருந்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 20,510 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,11,835 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...