குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் 10 மாவட்டங்களில் வார இறுதி பொதுமுடக்கம்

அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் வார இறுதி பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஏப்ரல் 2021, 10:11 am

DIN

அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் வார இறுதி பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் சத்தீஸ்கர் எல்லையில் உள்ள சுந்தர்கர், சம்பல்பூர், மல்கன்கிரி, பர்கர் உள்பட 10 மாவட்டங்களில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அம்மாநில தலைமை செயலர் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த காலகட்டத்தில் புவனேஸ்வர், கட்டாக் மற்றும் பிற நகர்ப்புறங்களிலும் கரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதாக தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கெனவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்கத்தின் நேரம் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.