கரோனா எதிரொலி: பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.


புது தில்லி: நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை, தடுப்பூசி திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், வென்டிலேட்டா்கள், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...