தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன: அமைச்சர் தகவல்

தில்லியில் 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஏப்ரல் 2021, 9:59 am

DIN

தில்லியில் 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தில்லியில் தற்போது வரை 18,923 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 16,461 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன என்று தெரிவித்தார். 

கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், புதிதாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். 

தலைநகா் தில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் அடுத்த திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.