ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

’தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்’: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்

கரோனா தொற்று அதிகரிப்பால் தில்லியை விட்டு வெணியேற வேண்டாம் என துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
’தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்’: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்
Updated On :20 ஏப்ரல் 2021, 10:36 am

DIN

கரோனா தொற்று அதிகரிப்பால் தில்லியை விட்டு வெணியேற வேண்டாம் என துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் தலைநகரான தில்லியில் அதிக அளவிலான மக்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. எனினும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால் தற்போது 6 நாள்களுக்கு முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் அச்சத்தைத் தொடர்ந்து தில்லியில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தில்லி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், “புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.